வானில் தோன்றும் அற்புத நிகழ்வுகளை காண அரிய சந்தர்ப்பம்- திருச்சி அண்ணா கோளரங்கம் இன்று (மார்ச் 8) சிறப்பு ஏற்பாடு…!
திருச்சி- புதுக்கோட்டை சாலை, விமான நிலையம் அருகில் அண்ணா அறிவியல் மையம் அமைந்துள்ளது. இங்குள்ள கோளரங்கத்தில் வானில் தோன்றும் அற்புத நிகழ்வுகளை டெலஸ்கோப் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கண்டு களிக்க அவ்வப்போது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(08-03-2025) கோளரங்கத்தில் மாலை 6.30 மணி முதல் இரவு 8-30 மணி வரை டெலஸ்கோப் மூலம் வானில் தோன்றும் அற்புத நிகழ்வுகளை காண்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று வானம் தெளிவாக இருக்கும் நிலையில் பொதுமக்கள் இந்த அற்புத வான் நிகழ்வை அண்ணா அறிவியல் மையம் கோளரங்கம் வந்து பார்த்து மகிழலாம் என அண்ணா அறிவியல் மைய திட்ட இயக்குனர் அகிலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ADVERTISEMENT…👇
Comments are closed.