Rock Fort Times
Online News

திருச்சியில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்தவர் உயிரிழப்பு…!

திருச்சி மாவட்டம், மல்லியம்பத்து செங்கதிர்சோலை குடி தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 61). இவர், தனது மோட்டார் சைக்கிளில் ஓடத்துறை பாலத்தில் போக்குவரத்து சிக்னல் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கண்ணதாசன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.அருகில் இருந்தவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கண்ணதாசனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்