திருச்சி, ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் உள்ள கணபதி தோட்டம் என்ற இடத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகுந்தன் என்கிற முனீஸ் குமார் (வயது 27) என்பவர் மாடுகளை வைத்து பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. இவர், அப்பகுதியில் 4 மாடுகளை திருடியதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் முகுந்தனை கைது செய்தனர். அவரிடம் இருந்த திருடப்பட்ட மாடுகள் மீட்கப்பட்டன. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவை ஒட்டி கருட வாகன சேவையின் போது பக்தி வேடமிட்டு ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. சுவாமி ஊர்வலத்தின் போது ஜல்லிக்கட்டு காளையை எதற்காக அழைத்து வந்தார்? அதுவும் எங்காவது திருடப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.