கரூர் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் திருச்சியில் உள்ள ஒரு ஷோரூமில் சொகுசு கார் ஒன்றை வாங்கினார்.
பின்னர் புதிய காருக்கு பூஜை போடுவதற்காக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். காரை கோவில் தெற்கு வாசல் அருகே பக்தர்கள் நடைபாதையில் நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்ற அவர், சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, காரை அஜாக்கிரதையாக ரிவர்ஸ் எடுத்து திருப்பியுள்ளார். அப்போது தெற்கு வாசல் அருகே நடைபாதை ஓரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பக்தர் ஒருவரின் தலையில்
காரின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அந்த பக்தர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த பக்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து உரிமையாளர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.