Rock Fort Times
Online News

உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு திருச்சியில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்…!

மருத்துவம், இன்ஜினியரிங் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் திருச்சியில் இன்று(அக்.24) நடைபெற்றது. இதில், திருச்சியில் உள்ள பெரும்பாலான வங்கிகள் பங்கேற்றன. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகள் இணைந்து நடத்திய இந்த கல்விக்கடன் வழங்கும் முகாமினை மாவட்ட கலெக்டர் வே.சரவணன் தொடங்கி வைத்தார். முகாமில், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடனும், உறவினர்களுடனும் பங்கேற்று தங்களுக்கு தேவையான கல்வி கடன் கேட்டு வங்கிகளிடம் விண்ணப்பித்தனர். இதில் தேர்வான மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன்களுக்கான காசோலைகளை கலெக்டர் சரவணன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ஆர்.பாலாஜி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம். முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்