திருச்சி, வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் பகுருதீன். இவர் மேற்கு புலிவார்ரோடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரிடம் தில்லை நகர் ஒன்பதாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் அணுகி விற்பனை செய்து தருவதாக கூறி ரூ.8 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை வாங்கிச் சென்றார். பின்னர் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மட்டும் திரும்ப கொடுத்தார். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து பகுருதீன் பலமுறை கேட்டபோதும் பழனிவேல் பணமும் கொடுக்கவில்லை செல்போன்களையும் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து தில்லைநகர் குற்ற பிரிவு போலீசில் பகுருதீன் புகார் செய்தார். அதன்பேரில் பழனிவேல் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.