திருச்சி,திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் பாப்பாக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் இளையராஜா (36). இவர் மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளையராஜா, எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் இளையராஜா விற்கும் இவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த இவரது மனைவி தனது இரண்டு மகள்களை . அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மனைவி மற்றும் மகள்கள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் இளையராஜா விரத்தியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு இளையராஜா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ADVERTISEMENT…👇
Comments are closed.