திருச்சி, தில்லைநகர் 10வது கிராஸை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61). இவர் பிப்ரவரி 2ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று இருந்தார். பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு அடி உயர செம்பு சாமி சிலை, இரண்டு குத்து விளக்குகள், தங்க முலாம் பூசிய தட்டு, இரண்டு தங்க காசுகள் ஆகியவை திருட்டு போயிருந்தன. இந்த திருட்டு குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.