Rock Fort Times
Online News

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பாய்ந்தது…!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் நிலையத்தில் 2023-ல் இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (55). இவர் தற்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில், விராலிமலை அருகே பொருவாய் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமாருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதில் ராஜ்குமாருக்கும், நிலத்தரகர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதுதொடர்பாக விராலிமலை காவல் நிலையத்தில் 2023 மார்ச் 17ம்தேதி புகார் அளிக்கப்பட்டது.  இதில், ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க அவரிடம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்  ரூ.2லட்சம் லஞ்சமாக வாங்கியதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக கடந்த 2023 அக்டோபர் 4ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. குற்றச்சாட்டு உறுதியானதால் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்