டிராவல்சில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு பாய்ந்தது…!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருபுள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 39). இவரிடம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் நடத்தி வரும் மூன்று நபர்கள் அறிமுகமாகி தங்களுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறியுள்ளனர். இவர்களின் ஆசை வார்த்தையை நம்பி ரவி ரூ.14 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அந்த மூன்று நபர்களும் பணத்தை திருப்பி தராமல் ரவியை ஏமாற்றி வந்தனர். இது குறித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசில் ரவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சீனிவாச நகரை சேர்ந்த மூன்று பேர் மீது மோசடி பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.