Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே சாலையோர தடுப்பு கட்டையை உடைத்துக் கொண்டு தலைகீழாக கவிழ்ந்த கார்- ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்…! ( வீடியோ இணைப்பு)

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் தவசிமணி (44). நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த பிரவின் (26) என்பவரும் காரில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த தடுப்பு கட்டையை உடைத்துக் கொண்டு தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் தவசிமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பிரவின், மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்