திருச்சியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இருவர் மீது மோதிவிட்டு கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்த கார்- 4 பேர் படுகாயம்…!(வீடியோ இணைப்பு)
திருச்சி, புள்ளம்பாடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ( வயது 23) மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா ஆகிய இருவரும் நண்பர்கள்.
இவர்கள் இருவரும் இன்று( மே 28) மாலை திருச்சி- ஸ்ரீரங்கம் பஞ்சகரை கொள்ளிடம் மைதானத்தில் வைத்து மது அருந்திவிட்டு ஒரு காரில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த திவாகர், ஜெயபிரகாஷ் ஆகிய இருவர் மீதும் மோதிவிட்டு 20 அடி உயரத்திலிருந்து கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்தது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இருந்த இருவரையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கார் மோதியதில் காயமடைந்த திவாகர், ஜெயபிரகாஷ் இருவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.