20 ஆண்டு கனவு நனவானது: துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…! * காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் நலன் கருதி துறையூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது துறையூர் மக்களின் 20 ஆண்டுகால கனவாகும். இதனை நிறைவேற்றும் விதமாக துறையூரில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இன்று ( ஜூன் 20) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி
மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதற்கான கல்வி கட்டணத்தை துறையூரை சேர்ந்த நகர்மன்ற கவுன்சிலர் வீர மணிகண்டன்
செலுத்தினார். பின்னர் அமைச்சர் கூறுகையில், மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்தால், தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், முசிறி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முதுகலை வகுப்புகள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பொன். முத்துராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துறையூர் ஸ்டாலின் குமார், முசிறி காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் கதிரவன், துறையூர் கல்லூரி முதல்வர் அருணாச்சலம் மற்றும் பேராசிரியர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.