திருச்சியில் நாளை(டிச.21) தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட , மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.