Rock Fort Times
Online News

இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை: வங்கிகளில் காசோலை டெபாசிட் செய்தால் உடனே பணம்…* இன்று(அக்.4) முதல் அமல்!

காசோலையை வங்​கி​களில் டெபாசிட் செய்​தால் இனி நாள்கணக்​கில் காத்​திருக்க வேண்​டிய அவசி​யமில்​லை. ஒரேநாளில் கையில் பணம் கிடைக்​கும் வசதியை வங்​கி​கள் இன்று( அக்.4) முதல் அமல்​படுத்த உள்​ளன. விரை​வான மற்​றும் பாது​காப்​பான பணம் செலுத்​து​வதற்​கான புதுப்​பிக்​கப்​பட்ட தீர்வு கட்​டமைப்பை ரிசர்வ் வங்கி வடிவ​மைத்​துள்​ளது. இதைத் தொடர்ந்து எச்​டிஎப்​சி, ஐசிஐசிஐ உள்​ளிட்ட தனி​யார் வங்​கி​கள் ஒரே நாளில் காசோலையை பணமாக மாற்​று​வதற்​கான (கிளியரிங்) வசதியை இன்று முதல் தொடங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளன. அதன்​படி, அக்டோபர் 4 முதல் டெபாசிட் செய்​யப்​படும் காசோலைகள் இனி இந்த புதிய முறை​யின் கீழ் ஒரே நாளில் பரிசீலிக்​கப்​பட்டு பணம் சில மணி நேரங் களுக்​குள் வாடிக்​கை​யாளர்​களின் கணக்​கில் வரவு வைக்​கப்​படும். காசோலைகள் பவுன்ஸ் ஆவதை தடுக்​க​வும், தாமதங்​கள் அல்​லது நிராகரிப்பு செய்​யப்​படு​வதை தவிர்க்​க​வும் காசோலை​யில் அனைத்து விவரங்​களை​யும் துல்​லிய​மாக நிரப்​பப்​படு​வதை உறுதி செய்​யும்​படி வாடிக்​கை​யாளர்​களை இந்த இரு தனி​யார் துறை வங்​கி​களும் அறி​வுறுத்​தி​யுள்​ளன. பாசிட்​டிவ் பே சிஸ்​டத்தை பயன்​படுத்தி பாது​காப்பை மேம்படுத்​த​வும், சரி​பார்ப்​புக்​கான முக்​கிய காசோலை விவரங்​களை முன்​கூட்​டியே சமர்ப்​பிக்க வேண்​டும் என்​றும் வாடிக்​கை​யாளர்​களிடம் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. ரூ.50,000- க்கும் அதி​க​மான காசோலைகளை டெபாசிட் செய்​வதற்கு குறைந்​தது 24 மணி வேலை நேரத்​திற்கு முன்னதாக கணக்கு வைத்​திருப்​பவர்​கள் கணக்கு எண், காசோலை எண், தேதி, தொகை மற்​றும் பயனாளி​யின் பெயரை வங்​கிக்கு வழங்க வேண்​டும். காசோலையை வழங்​கிய​வுடன் வங்​கி​கள் இந்த விவரங்​களைச் சரி​பார்க்​கும். தகவல் பொருந்​தி​னால் காசோலைகள் கிளியர் செய்யப்​படும். இல்​லை​யெனில் கோரிக்கை நிராகரிக்​கப்​படும். மேலும், பணம் எடுப்​பவர் விவரங்​களை மீண்​டும் சமர்ப்​பிக்க வேண்​டும். வாடிக்​கை​யாளர்​கள் குறிப்​பிட்ட பிராந்​திய முகவரி​களுக்கு காசோலை விவரங்​களை மின்​னஞ்​சல் செய்ய வேண்​டும். வங்​கி​கள் காசோலையைப் பெறு​வதற்கு முன்பு ஒப்​புதல் செய்​தியை அனுப்​பும். மேலும், ரூ.5 லட்​சத்​திற்கு மேல் உள்ள காசோலைகளுக்கு ஆர்​பிஐ பாசிட்டிவ் பே-வை கட்​டாய மாக்​கி​யுள்​ளது, அதே நேரத்​தில் ரூ.50,000 க்கு மேலான காசோலைகளுக்​கும் இது கட்​டா​யம் பரிந்​துரைக்​கப் படுகிறது. பாசிட்​டிவ் பே-​வின் கீழ் சரி​பார்க்​கப்​பட்ட காசோலைகள் ரிசர்வ் வங்​கி​யின் குறை தீர்வு முறை​யின்​ கீழ்​ பாது​காக்​கப்​பட்​ட​வை​யாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்