ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வை அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா வரி தொடர்பான முடிவுகள் வளர்ச்சியை பாதிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.