Rock Fort Times
Online News

திருச்சியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர் அகற்றம்… * போலீஸ் கமிஷனரிடம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மனு…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற கொள்கை முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் வருகிற 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். எடப்பாடி  பழனிச்சாமியை வரவேற்று திருச்சி மாநகர் பகுதிகளில் ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் குட்ஷெட் மேம்பாலம் பகுதியில் மிகப்பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை ஆயுதப்படை போலீசார் 5-க்கும் மேற்பட்டோர் அகற்றினர். இந்நிலையில் பேனர்கள் அகற்றப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து முறையிட்டனர். பின்னர் அவரிடம் ஒரு மனு அளித்தனர்.  அகற்றப்பட்ட பேனரை மீண்டும் வைக்க வேண்டும் என்றும் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.அப்போது அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், பகுதி செயலாளர்கள் அன்பழகன், ராஜேந்திரன், நாகநாதர் பாண்டி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், இளைஞர் அணி துணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், வழக்கறிஞர் அணி துணை தலைவர் வக்கீல் முல்லை சுரேஷ், இணைச் செயலாளர் வக்கீல் தினேஷ் பாபு, நிர்வாகிகள் ஆசை தம்பி, ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்