Rock Fort Times
Online News

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் உட்பட 2 பேர் கட்சியில் இருந்து விடுவிப்பு- * இபிஎஸ் நடவடிக்கை…!

அதிமுகவிலிருந்து கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் உட்பட 2 பேர் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜான் தங்கம் மற்றும் திருவட்டார் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர். ஜெயசுதர்ஷன் இருவரும் இன்று( ஜூன் 27) முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் ஆர்.ஜெயசுதர்ஷன் (கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு அச்சக முன்னாள் தலைவர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்