தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்து சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது 80 டிஎம்சி அளவில் தான் மேட்டூரில் தண்ணீர் உள்ளது. எனவே கர்நாடக அரசு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும். அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்கள் தமிழக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. ஆகவே, தமிழ்நாடு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக முதலமைச்சரும் இது குறித்து மத்திய அரசுடன் பேச வேண்டும். விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பை வழங்க வேண்டும். மக்காச்சோளத்தை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தலையில் துண்டு போட்டு கையில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
Comments are closed.