Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் பண்டல், பண்டலாக சிக்கிய இ-சிகரெட்டுகள்…! * 3 பயணிகளிடம் விசாரணை…!

தலைநகர் கோலாலம்பூரிலிருந்து  திருச்சி விமான நிலையத்தை ஒரு விமானம் வந்தடைந்தது.அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகளின் உடைமைகளில்  பண்டல் , பண்டலாக இ-சிகரெட்டுகள் இருந்தன. அந்த சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிகரெட்டுகளை கடத்தி வந்த 3 பயணிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இ- சிகரெட்களின் மதிப்பு 11 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்