குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க திருச்சி நீதிமன்றத்தில் “குழந்தைகள் மகிழகம்” அமைப்பு- * மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் திறந்து வைத்தார்!
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கு விசாரணைக்காக வரும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவும், குழந்தைகளை பராமரிக்கவும் ஏதுவாக திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் “குழந்தைகள் மகிழகம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் திறந்து வைத்தார். தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அமர்வு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி. கணேசன், செயலாளர் சி.முத்துமாரி, துணைத்தலைவர் வடிவேல்சாமி, குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், துணைத் தலைவர் சசிகுமார், அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, மோகன், வழக்கறிஞர்கள்
மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகளை கவரும் விதமான வண்ணமிகு ஓவியங்களுடன், குழந்தைகளை தூங்க வைப்பதற்கான தொட்டில்கள், பிளாஸ்டிக் இருக்கைகள், விளையாட்டு உபகரணங்களுடன் இந்த குழந்தைகள் மகிழகம் அமைக்கப்பட்டுள்ளது.
Comments are closed.