Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை…!

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயிலாங்கபுரம் ஸ்ரீ மகாலட்சுமி நகரை சேர்ந்த செழியன் என்பவரது வீட்டில் கடந்த 24-07-2024 அன்று கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு மற்றும் 29 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை
நம்பர் ஒன் டோல்கேட் வாழவந்தபுரம் பகுதியை சேர்ந்த அபிமன்யு மற்றும் உத்தமர் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன், மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த சாண்டி என்கின்ற சக்திவேல் ஆகிய 3 பேரும் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக செழியன் கொடுத்த புகாரின்பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபிமன்யு உட்பட 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அபிமன்யுவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து
குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முகமது சகாயில் தீர்ப்பளித்தார். குற்றம் நிரூபிக்கப்படாததால் மணிகண்டன், சக்திவேல் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாஸ்கர் வாதாடினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்