திருச்சி, சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை…!
திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயிலாங்கபுரம் ஸ்ரீ மகாலட்சுமி நகரை சேர்ந்த செழியன் என்பவரது வீட்டில் கடந்த 24-07-2024 அன்று கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு மற்றும் 29 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை
நம்பர் ஒன் டோல்கேட் வாழவந்தபுரம் பகுதியை சேர்ந்த அபிமன்யு மற்றும் உத்தமர் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன், மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த சாண்டி என்கின்ற சக்திவேல் ஆகிய 3 பேரும் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக செழியன் கொடுத்த புகாரின்பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபிமன்யு உட்பட 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அபிமன்யுவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து
குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முகமது சகாயில் தீர்ப்பளித்தார். குற்றம் நிரூபிக்கப்படாததால் மணிகண்டன், சக்திவேல் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாஸ்கர் வாதாடினார்.
Comments are closed.