திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது அந்த முதியவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து மயங்கி கிடந்த முதியவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோ- அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி கௌதம் பாபு கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்த முதியவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.