Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் சீமானிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு…!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜர் ஆவதற்காக திருச்சி நீதிமன்றத்திற்கு இன்று(08-04-2025) சீமான் வந்திருந்தார். பின்னர் அவர் திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு வந்த பொழுது அவரை சி ஐ எஸ் எஃப் வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது அவர் பாக்கெட்டில் சிறிய அளவிலான கத்தி ஒன்று இருந்துள்ளது. விமான நிலையத்துக்குள்ளும், விமானத்திலும் எந்த விதமான ஆயுதங்களும் எடுத்துச் செல்லக்கூடாது என்கிற விதி இருப்பதால் அந்த கத்தியை எடுத்துச் செல்லக்கூடாது என சி ஐ எஸ் எஃப் வீரர்கள் கூறி அதனை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். அதன்பின் அவர் விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்