கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் -திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள்- நாளை தொடங்குகிறது முன்பதிவு…!
தாம்பரம்-திருச்சி இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் – மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்படுகிறது. கோடை விடுமுறைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதனை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 4-ந் தேதி முதல் 27 ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி , சனி , ஞாயிறு என 3 நாட்கள் கோடை கால அதிவேக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நாளை( மார்ச் 12) காலை 8 மணிக்கு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் அதிவேக ரெயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையின் போது பேருந்துகள், மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் பயணிகள் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது, பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Comments are closed.