Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் பிப்.4-ந்தேதி முதல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்…!

திருச்சி மின்பகிர்மான வட்டத்துக்குட்பட்ட கோட்ட அலுவலகங்களில், பிப்.4-ந் தேதி முதல் அந்தந்த பகுதிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக திருச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஏ. செல்வி வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், திருச்சி மாவட்டம், துறையூர் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வருகிற 04-02-2025( செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கும், பிப்.7ம் தேதி முசிறி கோட்ட அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறும். அதேபோல பிப் 14ம் தேதி ஸ்ரீரங்கம் கோட்டம், 18-ம் தேதி திருச்சி நகரியம், 21-ம் தேதி திருச்சி கிழக்கு, 25-ம் தேதி மணப்பாறை கோட்ட அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், அந்தந்த பகுதியைச் சேர்ந்த மின்நுகர்வோர் தவறாமல் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்