Rock Fort Times
Online News

திருச்சியில் மின்வாரிய பெண் ஊழியர் வீட்டில் 19 சவரன் நகைகள் திருட்டு: கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை…!

திருச்சியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருபவர் புஷ்பவள்ளி(39). திருச்சி கருமண்டபம் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அரியலூர் சென்றிருந்தார்.  அங்கிருந்து அவர் ஊர் திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது  நான்கு சவரன் இரண்டு தங்க சங்கிலிகள், நான்கு சவரன் தங்க ஆரம், டாலருடன் கூடிய இரண்டரை பவுன் தங்க செயின் உள்ளிட்ட 19 சவரன் நகைகள் திருட்டுப் போய் இருந்தன.  இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புஷ்பவள்ளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்