கோவையிலிருந்து பெரம்பலூருக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. லாரியை நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த பிலால் பகோடா (40) என்பவர் ஓட்டினார். அந்த லாரி திருச்சி ஓயாமரி சுடுகாடு பாலத்தின் நடுவே இன்று(12-06-2024) அதிகாலை 4 மணி அளவில் சென்றபோது திடீரென லாரியின் முன்பக்கத்தில் தீ பற்றியது. இந்த தீ சிறிது நேரத்தில் லாரி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே அதன் டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி தீயணைப்பு நிலைய துணை அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.