Rock Fort Times
Online News

திருச்சி, தில்லைநகர் உதவி கமிஷனர் உள்பட 9 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்…!

திருச்சி, தில்லைநகர் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த கே. தங்கப்பாண்டியன், விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டிஎஸ்பி ஆகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய ஜி.தேவராஜ், தேனி மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் கூடம் டிஎஸ்பி ஆகவும், அரியலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய கே.கென்னடி திருச்சி கே.கே நகர் உதவி கமிஷனர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இதேபோல, திருச்சி உறையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.ரவிச்சந்திரன், திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என்.செந்தில்குமார்,  பொன்மலை காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஏ. பேபி உமா ஆகியோர் மத்திய மண்டலத்திற்கும், திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இம்மானுவேல் ராயப்பன், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய டி.சிவசுப்பிரமணியன் ஆகியோர் திருச்சி மாநகரத்திற்கும், திருவாரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கே.கார்த்திகா திருச்சி சரகத்திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல் குமார் பிறப்பித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்