Rock Fort Times
Online News

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு…

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு நேற்று ராமேசுவரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மண்டபத்திலிருந்து கடலுக்குச் சென்ற உயிர்தராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் இருந்த மீனவர்கள் நேற்று ( 06.12.2023 ) மாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, உயிர்தராஜின் விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த மீனவர்கள் ஜெயஸ்தன்(36), தால்ஷா (50), சார்லஸ் (54), லாசர் கெபிஸ்டன் (30), தினேஷ் (38),முனியசாமி (58), அருள் பிரிட்சன் (28), ஜான் சைமன் (31) ஆகிய 8 பேரை கைது செய்தனர். இவர்கள் இன்று  இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்