Rock Fort Times
Online News

சார்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தப்பட்ட 790 கிராம் தங்கம் திருச்சியில் பறிமுதல்!

சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர் அப்போது சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 46) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தபோது அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 790 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.48,15,840   என தெரிய வருகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்