Rock Fort Times
Online News

தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு…

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே உள்ள சரடமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 38). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். ராமச்சந்திரன் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் உணவருந்தி விட்டு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுகன்யா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்தனர். உடனே, சுகன்யா திடுக்கிட்டு எழுந்திருக்கவே அவரது கழுத்தில் கையை வைத்து அழுத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதில் சுகன்யாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில்காணக்கிளியநல்லூர் காவல் ஆய்வாளர் விஜய் கோல்டன் சிங் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்