அதிமுக ஆட்சியில் 7 கோடி நஷ்டம் – திமுக ஆட்சியில் 20 கோடி லாபம் ! திருச்சியில் கணக்கு சொன்னார் கைத்தறித்துறை மந்திரி காந்தி !
திருச்சி, தில்லைநகர் மக்கள் மன்றத்தில் தமிழக கைத்தறித்துறை சார்பில் விற்பனை பொருட்கள் மற்றும் கண்காட்சி இன்று ( டிச.27 ) ஆரம்பிக்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் எம்.ஆர்.காந்தி ஆகியோர் இந்த கண்காட்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த கைத்தறித்துறை அமைச்சர் காந்தி., “தமிழ்நாட்டில் கைத்தறி பொருட்கள் விற்பனை கண்காட்சியை திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடத்துகிறோம். இந்த கண்காட்சி வருகிற ஜனவரி 10ம் தேதி வரை நடைபெறும். இதில் விற்பனை இலக்காக ரூபாய் 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கைத்தறித்துறை ரூ. 7 கோடி வரை நஷ்டத்தில் இயங்கியது. தற்போது அந்த நிலை மாறி கைத்தறி துறையை லாபத்தில் கொண்டு வந்திருக்கிறோம். சென்ற ஆண்டு வரை மட்டும் ரூ. 20 கோடி வரை இந்த துறையில் லாபம் கிடைத்துள்ளது என்று பேசினார்”.
Comments are closed.