Rock Fort Times
Online News

அமைச்சர் செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கம்…! அமலாக்கத்துறை நடவடிக்கை..

கரூரில் கடந்த 3-ந் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை அமலாக்கத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி கணக்கில் வராத ரூ.22 லட்சம் , 16.6 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்