திருச்சி ஏர்போர்ட் கக்கன் காலனியை சேர்ந்தவர் நடராஜன்.இவரது மனைவி ஷீபா (வயது 32 ). இவர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ( 09.01.2024 ) இரவு தனது மகனுடன் திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டு விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மன்னார்புரம் மதுரை சர்வீஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் ஷீபா வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபா்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ஷீபா கே.கே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபா்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.