திருச்சி கலெக்டர் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!- திருச்சி மாவட்ட கலெக்டராக மாநகராட்சி ஆணையர் வெ.சரவணன் நியமனம்…
திருச்சி கலெக்டர் மா.பிரதீப்குமார் உட்பட தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மத்திய அரசு பணியில் இருந்த ராஜேந்திர ரத்னூ தமிழக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித்துறை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை செயலராக இருந்த விஜயகுமார் நிலச்சீர்த்திருத்த ஆணையராகவும், சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக வள்ளலார் நியமிக்கப்பட்டு உள்ளனர். நிதித்துறை( செலவினம்) செயலாளராக பணியாற்றிய எஸ்.நாகராஜன் வணிகவரி ஆணையராகவும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விஇயல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய சங்கர் உயர்கல்வித்துறை செயலாளராகவும், உயர்கல்வித்துறை செயலாளராக பணியாற்றிய சமயமூர்த்தி மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். மனித வள மேலாண்மை துறை முதன்மை செயலாளராக பணியாற்றிய பிரகாஷ் சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை செயலாளராகவும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளராக பணியாற்றிய பிரபாகர் பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்ட த்திற்கும், மத்திய அரசு பணியில் பணியாற்றிய வெங்கடேஷ் நிதித்துறை சிறப்பு செயலாளராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வெ.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றும் பி.மதுபாலன் திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்:
இதேபோல 9 மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய கிறிஸ்துராஜ் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக இயக்குனராகவும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் செயலாளராகவும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் செயலாளராகவும்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும், மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா சமூக நலம் இயக்குனராகவும், திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் பேரூராட்சிகள் இயக்குனராகவும், ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால்
சுன்கரா நில அளவை மற்றும் நில வரி திட்ட இயக்குனராகவும், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராகவும், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் ஊரக புத்தாக்க திட்ட தலைமை இயக்க அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Comments are closed.