கேரள மாநிலம், இடுக்கி வரையாற்றுமண்டி, எல்லக்கல் பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் டொனாட். இவரது மனைவி அமுல்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்தநிலையில் புதுமண தம்பதிகள் காரில் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று விட்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த கார் இன்று(24-06-2025) காலை துவாக்குடி அருகே உள்ள அரை வட்ட சாலையில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த கண்டைனர் லாரியும், காரும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில், காரின் முன் பகுதி சுக்கல், சுக்கலாக நொறுங்கியது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டொனாட் பரிதாபமாக உயிரிழந்தார். அமுல்யா பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தம்பதியை போராடி மீட்டனர். பின்னர், அமுல்யாவுக்கு துவாக்குடி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டொனாட் உடல் பிரேத பரிசோதனைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.