திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 புதிய பேருந்துகள் இயக்கம்- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் திருச்சி மண்டலத்தின் சார்பில் ஒரு மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப் பேருந்துகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார், துணை மேலாளர்கள் சாமிநாதன், ரவி, போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நகரப் பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு திருவெறும்பூர், என்ஐடி வழியாக துவாக்குடிக்கு புறப்பட்டு சென்றது. மற்ற 4 பேருந்துகள் புறநகர் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.
Comments are closed.