தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறவுள்ளது. 34 எம்எல்ஏக்கள் ஒரு மாநிலங்களை எம்பிஐ தேர்ந்தெடுக்க முடியும். அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்கும். அந்த வகையலில் தற்போது எம்பியாக உள்ள அன்புமணி ராமதாஸ், சண்முகம், சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் நான்கு பேர் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள 2 பேரை அதிமுக தலைமை இன்று( ஜூன் 1) அறிவித்துள்ளது. அதன்படி முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதற்காக தேமுதிக சார்பில் அதிமுகவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.ஆனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் எனவும், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலின் போது தேமுதிகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக திமுக சார்பாக வேட்பாளராக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் போட்டியிடுவார்கள் என்று அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.