Rock Fort Times
Online News

திருச்சி, துவரங்குறிச்சி பகுதியில் நாளை (ஜூன் 2) மின்தடை…!

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதியில் நாளை (02.06.2025 ) திங்கட்கிழமை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துவரங்குறிச்சி துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வரதக்கோன்பட்டி, வளநாடு, முருகப்பட்டி, தேனூர், வைரம்பட்டி, கொடும்பப்பட்டி, வாடிப்பட்டி, குளுந்தாம்பட்டி, புதுப்பட்டி, சின்னராக்கம்பட்டி, பெரியராக்கம்பட்டி, அம்மாபட்டி, நவக்குடி, கவுண்டம்பட்டி, புதுக்குடி, ராஜாபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் இரா. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்