தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் இதனை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 18 பேரிடர் மீட்பு குழுவினர் அதிநவீன கருவிகளோடு தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு மீட்புக் குழுவிற்கும் 30 பேர் வீதம் 540 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதில், 4 குழுவினர் திருச்சி வந்துள்ளனர். இந்த குழுவினர் தேவைக்கேற்ப திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த மீட்பு குழுவினர்
இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் சூசைராஜ் தலைமையில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சி மையத்தில் மீட்பு பணி ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அதேபோல தமிழக காவல்துறை சார்பில் பொதுமக்கள் நலனுக்காக 24 மணிநேரமும் செயல்படும் வண்ணம் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.