திருச்சியில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்ட பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. இதுதொடர்பாக கட்டிட வடிவமைப்பை தயார் செய்யவும், ஆலோசகர்களை தேர்வு செய்யவும் பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது. இதற்கிடையே நூலகம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகம் 7 தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது. நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, மதுரைக்கு அடுத்து உலக தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் திருச்சியில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.