தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை( மார்ச் 21) முதல் ஏப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்து, செய்முறை தேர்வு, நேர்காணல் மூலம் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதிகபட்சமாக கும்பகோணம் கோட்டத்தில் 756 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு www.arasubus.tn.gov.in-ல் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.