திருச்சியில் 10-ம்வகுப்பு மாணவர்கள் 3 பேர் மாயம் : பெற்றோர்கள் புகாரின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டை…!
திருச்சி, பொன்மலை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் அபிஷேக் (வயது 15). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்கரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது நண்பர்கள் பீமநகர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் மகன் பிரபா ஹரிகரன் (15), சங்கிலியாண்ட புரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஹரிஹரன் (15) ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவர்களை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து 3 மாணவர்களின் பெற்றோர்களும் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மாணவர்களையும் தேடி வருகின்றனர். திருச்சியில் 10-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.