தஞ்சை கோடியம்மன் கோயில் செக்போஸ்டில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் சந்தேகத்துக்கு உரிய வகையில் வந்த சொகுசு காரை நிறுத்தி காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனை அடுத்து காவல் துறையினர் அந்த காரை சோதனை யிட்டனர். அப்போது பின் இருக்கையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில் பண்டல், பண்டலாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரில் வந்த பால்பாண்டி (40), ரவிக்குமார் (28), வீரப்பன் (26) ஆகிய மூன்று பேரையும் தஞ்சை மேற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியில் இருந்து கடல் மார்க்கமாக கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர், காரையும் காரில் கடத்தி வரப்பட்ட 103 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.