தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்
திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மூவரும் நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.