Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்
திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மூவரும் நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்