வேலூர் மாவட்டம், கொணவட்டம் பகுதி அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(04-12-2024) அதிகாலை ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சென்னை, மணலி பகுதியை சேர்ந்த மாலிக்பாஷா உள்பட ஜீப்பில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.