Rock Fort Times
Online News

வேலூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதியதில் 3 பேர் பலி…!

வேலூர் மாவட்டம், கொணவட்டம் பகுதி அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(04-12-2024) அதிகாலை ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சென்னை, மணலி பகுதியை சேர்ந்த மாலிக்பாஷா உள்பட ஜீப்பில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்