Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் “டிரான்ஸ்பர்”…!

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பணி ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஐ.பி.எஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல் விரிவாக்க பிரிவு ஐ.ஜி. எஸ்.லட்சுமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன்நாயர் காவல்துறை தலைமையக ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்