Rock Fort Times
Online News

திருச்சி மாநகரில் 3 இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்…!

திருச்சி மாநகர காவல் துறைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், அரியமங்கலம், பொன்மலை, ஏர்போர்ட், கே.கே.நகர், எடமலைப்பட்டிபுதூர், கண்டோன்மென்ட், செசன்ஸ் கோர்ட், அரசு மருத்துவமனை, உறையூர், தில்லை நகர் என 14 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்குள்ள இன்ஸ்பெக்டர்களில் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி நீதிமன்ற (செஷன்ஸ் கோர்ட்) காவல் நிலைய சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜகணேஷ் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்துக்கும், அங்கிருந்த விஜயபாஸ்கர் கோட்டை காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், தில்லைநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நீதிமன்ற சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆகவும் பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா காமினி உத்தரவிட்டுள்ளார். கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த பெரியசாமி ஜனவரி 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றதால் அங்கு தற்போது இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்