Rock Fort Times
Online News

கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு…

அரசு மருத்துவமனையில் அனுமதி...

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிர் இழந்தார். அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக அந்த மாவட்டத்தில் சவர்மா, கிரில் சிக்கன் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்களில் சோதனை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிர் இழந்த சுவடு மறைவதற்குள் கிருஷ்ணகிரியில் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையில் இயங்கி வரும் சக்தி ஃபாஸ்ட் ஃபுட் கடையில் குருபரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் 150 சிக்கன் ரைஸ் வாங்கி  சென்றுள்ளார். அதனை சாப்பிட்ட 26 வட மாநில தொழிலாளர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்…. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்